சத்திர சிகிச்சை காப்பீடு

சத்திர சிகிச்சைத் திட்டம் என்றால் என்ன?

எதிர்பாராத சத்திர  சிகிச்சை  நிகழ்வில் நிதி பாதுகாப்புக்காக, SLIC சத்திர சிகிச்சை திட்டம் உங்களுக்கு ஒரு விரிவான திடட்த்தை  வழங்குகிறது, இது சத்திர  சிகிச்சை செலவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உச்ச மட்ட அளவு வரையில் சத்திர  சிகிச்சை மருத்துவத்திற்கான செலவுகளை ஈடு செய்யும் விரிவான ஒரு காப்புறுதிப் பத்திரத்தை உங்களுக்கு வழங்குகின்றது.. இந்த திட்டம் உங்களையும், உங்கள் துணைவியாரையும் மற்றும் 5 சார்ந்துள்ள குழந்தைகளையும் உள்ளடக்கியது, மேலும் SLIC ஆயுள் காப்பீட்டுக் திட்டத்தின் மூலம்  வாங்க வேண்டும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
ஆகக் கூடிய தொகை இல.ரூ. 1,000,000

ஒரு மருத்துவ தேவையின் போது மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் போது ஆகக் கூடியது இல. ரூ. 1,000,000 செலுத்தப்படும்; அல்லது அறுவை சிகிச்சையின் இயல்பு மற்றும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுகூலங்கள் என்பவற்றின் இயல்புக்கமைய உச்ச மட்ட தொகையிலிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒரு சதவீதம் செலுத்தப்படும்

பட்டியலிடப்பட்ட 360 க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள்

பட்டியலிடப்பட்ட 360க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பட்டியலிடப்படாத மேலும் பல அறுவை சிகிச்சைகள் என்பவற்றுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அறுவை சிகிச்சைத் திட்டம்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அறுவை சிகிச்சைத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையின் வகைக்கமைய உங்களது அறுவை சிகிச்சைத் திட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 10% தொடக்கம் 100% வரையிலான கோரிக்கைகளை நீங்கள் முன்வைக்க முடியும்

காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதியில் 5 மடங்குகள் வரையில்

மொத்த காப்புறுதிப் பத்திர காலப் பிரிவிலும் காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதியில் ஐந்து மடங்கு வரையில் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்

வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள்

சிங்கப்பூர், இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு செல்லுபடியானதாகும்

காப்புறுதி காலப் பிரிவு

காப்புறுதி காலப் பிரிவு 5 தொடக்கம் 30 வருடங்கள் வரையில்

தகைமை
  • 70 வயதில் காப்புறுதிப் பாதுகாப்பு முடிவடையும் விதத்தில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். பிள்ளைகள் 3 மாதம் தொடக்கம் 20 வயது வரையிலான வயதுப் பிரிவில் இருந்து வருதல் வேண்டும். அவர்கள் 25 வயது வரையில் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வார்கள்.
  • இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டிருத்தல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்