ஸ்வர்ண தஜ

ஸ்வர்ண தஜ என்றால் என்ன?

இலங்கையின் தேசிய காப்புறுதியாளர் என்ற முறையில் பொன்னான ஐம்பதாண்டுகளை கொண்டாடும் விதத்தில் நாங்கள் ஸ்வர்ண தஜ என்ற பெயரில் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றைத் துவக்கி வைத்துள்ளோம். உங்கள் ஆயுளையும், உங்கள் அன்புக்குரியவர்களின் ஆயுளையும் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து அனைத்து இலங்கையர்களுக்கு மத்தியிலும் விழிப்புணர்வைத் தூண்டும் பொருட்டு இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து தம்மையும், தமது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஸ்வர்ண தஜ திட்டத்துக்கு ஊடாக இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஒரு ஆயுள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நாங்கள் ஊக்குவிக்கின்றோம். அதன் மூலம் ஒளிமயமான, பொன்மயமான எதிர்காலமொன்றுக்கான வலுவான அத்திவாரத்தை இடுவதன் மூலம் அவர்கள் தமது வாழ்க்கைக்கு மேலும் பெறுமதியைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
கிடைக்கும் தெரிவுகள்

காப்புறுதி உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை தொகை என்ற முறையில் இல.ரூ. 100,000, இல.ரூ. 200,000 அல்லது இல.ரூ. 300,000 தொகையைத் தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு

காப்புறுதிப் பத்திரத்தை விரைவில் பூர்த்தி செய்தல்

ஒரு தவணைக் கட்டணத்தைச் செலுத்தி, மிகவும் எளிமையான மருத்துவ பிரகடனப் பத்திரமொன்றைப் பூர்த்தி செய்து, காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈடு

காப்புறுதிப் பத்திரத்தை வைத்திருப்பவரின் மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை காப்புறுதி செய்யப்பட்ட அசல் தொகையாக இருந்து வரும். அதே வேளையில், மரணம் ஒரு விபத்து மரணமாக இடம்பெற்றிருந்தால் காப்புறுதி செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்

முதிர்ச்சியின் போது கிடைக்கும் அனுகூலங்கள்

காப்புறுதி முதிர்ச்சியடையும் பொழுது ஓர் அனுகூலமாக காப்புறுதி பத்திரதாரர் செலுத்தியிருக்கும் மொத்த தவணைக் கட்டணத் தொகையும் வட்டியில்லாமல் மீளளிக்கப்படும்

தகைமை
  • ஸ்வர்ண தஜ காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகுதியுடையவராவார்கள். (காப்புறுதிப் பத்திரம் காலாவதியாகும் உச்ச மட்ட வயது 70 வருடங்கள்)
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்