ஜன திறி - இரண்டு வருட நிவாரணத் திட்டம்

ஜன திறி - 2 வருட நிவாரணத் திட்டம் என்றால் என்ன?

பருவ கால ரீதியில் வருமானங்களைப் பெறுபவர்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமான இத்திட்டம் வருடம் முழுவதும் ஈடிணையற்ற பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது! ஜன திறி என்பது உங்களுடைய தவணைக் கட்டணம் 2 வருடங்கள் தாமதமாகியிருக்கும் சந்தர்ப்பத்திலும் கூட, ஆயுளுக்கு முழுமையான பாதுகாப்பைப் பெற்றுத் தரும் ஒரு காப்புறுதித் திட்டமாகும். விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது பருவ கால வருமானங்களை எடுத்து வரக் கூடிய ஏனைய தொழில்துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோரின் தேவைகளுக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஒரு திட்டமாக இந்த ஜன திறிய திட்டம் இருந்து வருகின்றது.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
சகாய காலம் 2 வருடங்கள்

ஆகக் குறைந்தது முதலாவது வருடத்தின் தவணைக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் செலுத்தப்படாத தவணைக் கட்டணங்களுக்கென 2 வருட கால சகாய காலப் பிரிவு வழங்கப்படும். அதே வேளையில், காப்புறுதித் திட்டத்தின் பாதுகாப்பு அனுகூலங்களை அவர்கள் தொடர்ந்து பெற்று வருவார்கள்

காப்புறுதிப் பத்திரத்தின் காலம்

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவுகள் 10 வருடங்கள் தொடக்கம் 40 வருடங்கள் வரையில்

தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் முறைகள்

நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய விதத்தில் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான விருப்பத் தெரிவுகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)

உத்தரவாதப்படுத்தப்பட்ட கூட்டு போனஸ் தொகை

காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் மொத்தத் தொகையில் 100% மற்றும் முதிர்ச்சியின் போது வழங்கப்படுவதாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கூட்டு போனஸ் தொகை

மேலதிக காப்புறுதி பாதுகாப்புக்கள்

கடுமையான நோய்களுக்கான காப்புறுதி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதி பாதுகாப்பு, வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் ஏனைய பல காப்புறுதி பாதுகாப்புக்கள் போன்ற பல்வேறு மேலதிக காப்புறுதி பாதுகாப்புக்களுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடிய திட்டம்

மரணத்தின் போது வழங்கப்படும் நட்ட ஈடு

காப்புறுதிப் பத்திரதாரரின் மரணத்தின் போது உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை மற்றும் கூட்டு போனஸ் தொகை என்பன வழங்கப்படும்

நெகிழ்ச்சித் தன்மை

உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் சார்ந்திருக்கும் ஐந்து பிள்ளைகள் வரையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதியையும் உள்ளடக்கிய விதத்தில் மேலும் பல காப்புறுதி பாதுகாப்புக்களை உள்ளடக்கிக் கொள்ளக் கூடிய திட்டம்

தகைமை
  • ஜன திறிய காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகுதியுடையவர்களாவார்கள்.
  • விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் போன்ற பருவகால வருமானம் ஈட்டுபவர்களுக்கு மிகவும் பொருத்தமானதொரு திட்டமாகும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்