திவிசவி பாதுகாப்புத் திட்டம்

திவிசவி பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன?

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல நிதித் திட்டம், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் அவர்கள் உங்களை  இழந்தால். மற்ற நிதி உறுதிப்பாடுகளுக்கு மத்தியில் தேவைப்படும் மற்றும் மாறும் இலங்கை வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற திட்டங்களின்  தொகுப்பில் சமீபத்தியது, திவிசவி மிகவும் மலிவு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இதற்கு குறைந்த  மாதாந்த கட்டுப்பணம்   LKR 320, உங்களுக்கும், உங்கள்  அன்புக்குரியவர்களுக்கும்  நிதி சுதந்திரம் மற்றும் அமைதியை வழங்குகிறது. 

திவிசவி என்பது இலங்கையர்கள் தங்கள் வாழ்விலும் அவர்களின் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையிலும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய ஊக்குவிக்க இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தால்  தொடங்கப்பட்ட சமீபத்திய திட்டமாகும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
கட்டுபடியாகும் தன்மை

காப்புறுதிப் பத்திரத்தின் காலம்: 5 தொடக்கம் 40 வருடங்கள் வரையில்

நெகிழ்ச்சித் தன்மை

பெருமளவுக்கு நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டணக் கொடுப்பனவு முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, ஆண்டுக்கு இரு முறை அல்லது வருடாந்தம்)

உடனடி நட்ட ஈடு

தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலத்தில் (இயற்கை அல்லது விபத்து காரணமாக) காப்புறுதிப் பத்திரத்தை வைத்திருப்பவர் மரணமடையும் போது சார்ந்திருப்பவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை உடனடியாக நட்ட ஈடாக வழங்கப்படுகின்றது

மேலதிகக் காப்புறுதி பாதுகாப்புடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது

வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதிப் பாதுகாப்பு, ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் அறுவை சிகிச்சைத் திட்டம், மருத்துவமனை காசுத் திட்டம், அனைத்துமடங்கிய உடல்நல ப்ளஸ் திட்டம் மற்றும் ஏனையவற்றையும் உள்ளடக்கிய உடல்நல பாதுகாப்புக்களுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது

தகைமை
  • 18 தொடக்கம் 65 வயது வரையிலான வயது வந்தவர்கள் திவிசவி திட்டத்தில் சேருவதற்கு தகைமையுடையவர்களாவார்கள்.
  • காப்புறுதி செய்யப்படும் ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 50,000 ஆக இருந்து வருதல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்