ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் திட்டம்

ஸ்பீட் இன்வெஸ்ட்மென்ட் திட்டம் என்றால் என்ன?

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குப் பயனளிக்கக் கூடிய நீண்ட கால முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து சிந்திக்கும் பொழுது பிரகுண ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தைப் பார்க்கிலும் சிறந்த வேறு எந்த அனுகூலங்களும் உங்களுக்கு இருந்து வர முடியாது. உங்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகை வருடாந்தம் 5% ஆல் அதிகரித்து வரும். அதே வேளையில், நீங்கள் செலுத்தும் தவணைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்பட மாட்டாது. ஆகவே, நீங்கள் செலுத்திய அடிப்படைத் தொகையில் இரட்டிப்புத் தொகையை இருபது வருடங்களின் பின் பெற்றுக் கொள்வீர்கள்.

உதாரணம்: இல.ரூ. 500,000 உத்தரவாதத்துடன் கூடிய காப்புறுதித் திட்டமொன்றுக்கு:

10ஆவது ஆண்டில்
ஆதாயம்
இல.ரூ. 750,000 + போனஸ் கொடுப்பனவுகள்
20ஆவது ஆண்டில்
ஆதாயம்
இல.ரூ. 1,000,000 + போனஸ் கொடுப்பனவுகள் (உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் இரட்டிப்பு மடங்கு)
30ஆவது ஆண்டில்
ஆதாயம்
இல.ரூ. 1,250,000 + போனஸ் கொடுப்பனவுகள்

 

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
உத்தரவாதப்படுத்தப்பட்ட வருடாந்த அதிகரிப்பு

காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் தொகையில் 5% வருடாந்த அதிகரிப்பு உத்தரவாதப்படுத்தப்படுகின்றது. தவணைக் கட்டணங்களில் அதிகரிப்புக்கள் இல்லை

அதிகரித்த அளவிலான போனஸ் கொடுப்பனவுகள்

அதிகரித்த அளவிலான தொகை மற்றும் முதிர்ச்சியின் போது உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைத் தொகையுடன் கூட்டு போனஸ்கள்

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு 10, 15, 20, 25, 30, 35 வருடங்கள் தொடக்கம் 40 வருடங்கள் வரையில்

தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் முறைகள்

நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய விதத்தில் தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை)

மேலதிக காப்புறுதி பாதுகாப்புக்கள்

கடும் சுகவீன காப்புறுதி பாதுகாப்பு, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதி பாதுகாப்பு, வாழ்க்கை துணைக்கான காப்புறுதி பாதுகாப்பு மற்றும் மேலும் பல அனுகூலங்கள் போன்ற உயரளவிலான பாதுகாப்புக்கென மேலதிக காப்புறுதிகளுடன் விரிவாக்கிக் கொள்ள முடியும்

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்டஈடு

காப்புறுதிப்பத்திரதாரரின் மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைத் தொகை மற்றும் அடிப்படைத் தொகைக்கு 5% வட்டியில் சேர்ந்திருக்கும் மேலதிக தொகை என்பவற்றின் இரு மடங்கு போனஸ் கொடுப்பனவுடன் சேர்த்து சார்ந்திருப்பவர்களுக்கு ஒரே தடவையில் செலுத்தப்படும்

நெகிழ்ச்சித்தன்மை

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது உங்கள் வாழ்க்கைத்துணைக்கும், ஐந்து பிள்ளைகள் வரையிலும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை

தகைமை
  • பிறகுண உயர் ஆதாய காப்புறுதி திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகைமை உடையவர்கள் ஆவார்கள்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்